சூலூர் அருள்மிகு
ஸ்ரீ தையல் நாயகி உடனமர் ஸ்ரீ வைத்தீஸ்வரர் சுயம்பு திருமேனி கொண்டு அருள்
பாலிக்கும் தீராத நோய் தீர்த்தருள வல்லவர்
ஆவார். சூரலூர் அரிய
பிராட்டி நல்லூர் என்று 9-ஆம் நூற்றாண்டில் அழைக்கப்பட்ட இன்றைய சூலூரின் கண் – சோழ அரசன் கரிகாலன் (கல்லனை கட்டியவன் அல்ல)
காட்டினை திருத்தி,சமன் செய்து ஊராக்கும் போது சுயம்பு மூர்த்தியாக கண்டு "வைத்தியலிங்கமுடையார்" என்ற திருநாமம் சாற்றி,கற்றளி கோவிலாககட்டி
கும்பாபிஷகமும் செய்வித்து பல்வேறு நிவேதனங்களை கோவிலுக்கு அளித்த்தாகவும்,
கொங்கு நாட்டில் அவன் கட்டிய 36 பெரிய
சிவாலயங்களில் ஓன்று எனவும்,தமிழ்நாடு அரசின் 1950ம் ஆண்டு வெளியீடான சோழன் பூர்வ
பட்டையம் எனும் நூல் தெரிவிக்கின்றது. தொடர்ந்து (1168-1196) அரசாண்ட மூன்றாம்
வீரசோழன் என்பான். இத் திருக்கோவிலில் சிவ பூசை முறையாக நடைபெற வரிக்கொடை அளித்த
செய்தியினை இன்றைய செலக்கரச்சல் மாரியம்மன் கோவில் முன்புள்ள தனிக் கல்வெட்டு
மூலமாக அறியலாம்.
தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடான
கோயம்புத்தூர் மாவட்டம் கல்வெட்டுக்கள் தொகுதி-2 என்ற நூல் இதனை உறுதி
செய்கின்றது.
எனவே, இத்திருக்கோவிலின் மூலவர் ஸ்ரீ
வைத்தீஸ்வர பெருமான் மிகவும்,பழமை வாய்ந்த மூர்த்தியாவார். கற்றளிக் கோவிலாக
இருந்த்து.காலப்போக்கில்,மற்ற கோவில்களை போல உரிய இறைவியினையும் ஸ்தாபித்து பரிவார
மூர்த்திகளையும் ஸ்தாபித்து இன்றைய கோவிலாக உருவெடுத்துள்ளது. இத்திருகோவிலை நாகை மாவட்டத்தின் ஸ்ரீ வைத்தீஸ்வரர் திருகோவிலுக்கு (செவ்வாய் கிரகஸ்தலம்)
இணையாக கருதலாம்.